• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘ஈரான் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியாது..’ – ட்ரம்ப் தகவலால் சர்ச்சை | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
‘ஈரான் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியாது..’ – ட்ரம்ப் தகவலால் சர்ச்சை | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 23, 2026 8:54 PM IST

போர் காரணமாக சர்வதேச எரிவாயு சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டதால் சிலிண்டர்களுக்கு இந்தியாவிலும் தட்டுப்பாடு உருவானது.

News18
News18

ஈரான் உடனான போரை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று தனக்கு தெரியாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் ஈரான் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். ஈரான் தயாரித்து வரும் அணு ஆயுதங்கள் தங்கள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்கிற அச்சத்தின்பேரில் அந்த நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக களம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

ஈரான் நாடு அமெரிக்காவுக்கு போரிட துருப்புகளை நிறுத்துவதற்கு உதவும் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், இந்த போர் காரணமாக சர்வதேச எரிவாயு சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டதால் சிலிண்டர்களுக்கு இந்தியாவிலும் தட்டுப்பாடு உருவானது. தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பி வரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து ஈரான் மீது 5 நாட்களுக்கு தற்காலிகமாக ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது-

நாங்கள் ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அதில் உடன்பாடு காணக்கூடிய பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஈரானின் மரியாதைக்குரிய மூத்த தலைவர்களுடன் அமெரிக்கா பேசியுள்ளது. இரு தரப்புமே ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறோம்.

இரு தரப்பினரும் பெரும்பாலும் இன்று தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவரிடமிருந்து நான் எதையும் கேள்விப்படவில்லை; அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட எனக்குத் தெரியாது.

இதையும் படிங்க: ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதலில் திடீர் திருப்பம்.. போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் உடனான இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் மகிழ்ச்சியடையும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது ஈரான் மற்றும் அந்தப் பிராந்தியம் முழுமைக்கும் ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். நாங்கள் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால், அவர்கள் 2 வாரங்களுக்குள் அணு ஆயுதத்தை உருவாக்கி இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தியிருப்பார்கள். என்று தெரிவித்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

பூஜையில் பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அர்ச்சகர்கள்… தலையில் தேங்காயை அடித்து அத்துமீறல்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நிபோங் தெபால் பட்டாசுக் கடை தீ விபத்து தொடர்பாக 3 பேர் கைது | Makkal Osai

Next Post
நிபோங் தெபால் பட்டாசுக் கடை தீ விபத்து தொடர்பாக 3 பேர் கைது | Makkal Osai

நிபோங் தெபால் பட்டாசுக் கடை தீ விபத்து தொடர்பாக 3 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin