Last Updated:
அண்டை நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது
அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை உலக அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டிருக்கும் நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள் குறித்து அராக்சி எடுத்துரைத்தார்.
அதேநேரம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பிரச்னையை தீர்க்க உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக செர்ஜி லாவ்ரோவ் உறுதியளித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க உதவும் அமைதி திட்டத்திற்கு பங்களிக்க தயாராக உள்ள நாடுகளுடன் இணைந்து பிரான்சும், இங்கிலாந்தும் மாநாட்டை நடத்த இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை கடற்கொள்ளைக்கு சமமானது என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் ராணுவம், அண்டை நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.


