ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை விட இது மிகவும் பெரிய அளவிலான தாக்குதலாக இருந்திருக்கும் என்றும், இதனால் மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகே, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய இந்தத் தீவிரத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கான நிபந்தனைகள்
இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Image Credit: PRIO
அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதும், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை நிறுத்துவதுமே ஈரான் செய்ய வேண்டிய சரியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

