இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
பாக்பூர், 2025 ஜூன் மாதப் போரின் தொடக்கத்தில் அவரது முன்னாள் தளபதி ஹொசைன் சலாமி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புரட்சிகரக் காவல்படையின் தலைவராக பொறுப்பேற்றவர் ஆவார்.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்
மேலும், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறைத் தலைவரும் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Image Credit: unn.ua
எனினும், இத்தகவல்கள் குறித்து ஈரான் அல்லது இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியிடவில்லை.
இதேவேளை, இந்த தாக்குதல்களில், ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உள்ளிட்ட பல உயர்மட்ட ஆட்சி மற்றும் இராணுவத் தலைவர்களும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தாக்குதல்களின் இறுதி விளைவுகள் குறித்து தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

