ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், ஈரானை ஒரே இரவில் அந்நாட்டை முழுவதுமாக அமெரிக்கப் படைகளால் வீழ்த்திவிட முடியும் என தனது நிலைப்பாட்டை அடிகோடிட்டுள்ளார்.
ஈரானில் அமெரிக்க விமானப்படை
அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ஈரானில் அமெரிக்க விமானப்படை வீரர்களை மீட்க வழிவகுத்த நடவடிக்கையை, அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்கது எனப் பாராட்டியுள்ளார்.
நமது வீரத் துணிச்சல் மிக்க போர் வீரர்களை தாயகம் திரும்ப அழைத்து வரத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு நான் உத்தரவிட்டேன்,” என்று செய்தியாளர்களிடம் கூறிய ட்ரம்ப், அந்தப் பணியின் ஒரு பகுதியாக 21 அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
