ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு $890 மில்லியன் செலவழிப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வோஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் இவ்வாறு தெரிவித்தன.
விமான நடவடிக்கைகளுக்கு தினமும் $30 மில்லியன், கடற்படை நடவடிக்கைகளுக்கு $15 மில்லியன் மற்றும் தரை நடவடிக்கைகளுக்கு $1.5 மில்லியன் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் செலவான தொகை
போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் $11.3 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தொடர்புடைய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, “ஒபரேஷன் எபிக் ஃப்யூரி” என்று பெயரிடப்பட்டுள்ள இது, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட செலவுமிக்க இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதல்களின் முதல் 100 மணி நேரத்திற்கு 3.7 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக தொடர்புடைய அறிக்கை கூறுகிறது.
முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் 11 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாக பென்டகன் காங்கிரஸிடம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்
ஜூன் 2025 இல் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட “ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைக்கு செலவிடப்பட்ட தொகை 2.26 பில்லியன் டொலர்கள் செலவானது.
இந்த நடவடிக்கை இரண்டரை மணி நேரம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

