ஈரான் இப்போது மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவர்களுக்கு முன்னால் இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, முற்றிலும் உலகளாவிய தனிமைப்படுத்தல் மற்றும் பிழைப்புக்கான பொருளாதாரம் அல்லது உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் வழி.
அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ‘ஜீரோ-லீக்கேஜ்’ அணுகுமுறையை அமல்படுத்துகிறோம்…
> ஈரான் பிற நாடுகளில் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாழ்வாதாரங்களான – டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றைக் குறிவைக்கிறோம்.
ஈரான் ஆட்சியுடன் தொடர்ந்து தொழில் செய்யும் முட்டாள்தனத்தில் ஈடுபடும் எவருக்கும் இரண்டாம் நிலைத் தடைகளின் ஆபத்தை இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கும்.
> ஈரான் சார்பில் பணமோசடிக்குத் (money laundering) துணைபுரியும் எந்தவொரு அமைப்பும் அமெரிக்க டாலர் அமைப்பிலிருந்து அகற்றப்படும்.
> ஈரான் ஆட்சியுடன் தொடர்பில் இருக்கும் நாடுகள் எங்கள் எச்சரிக்கையை உடனே கவனிப்பது நல்லது. அமெரிக்காவுடன் நிற்பவர்கள் எங்கள் கூட்டணியின் நன்மைகளை அறுவடை செய்வார்கள்.
ஈரானிய ஆட்சியுடன் கைகோர்ப்பவர்கள், சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆட்சியுடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

