
கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.
அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்திய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, கடந்த ஆண்டில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கையின் போது ஈரானில் புதைக்கப்பட்ட பி-2 குண்டுகளில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆழத் தோண்டி எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மேலும், ஈரானில் இனி யுரேனியம் செறிவூட்டப்படாது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.
இதற்கிடையில், டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்த “ஈரான் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும்” என்ற நிலைப்பாட்டை சில அளவில் மாற்றியபின், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தம் அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

