இந்தநிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் ஈரானில் பொதுமக்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானில் பலி எண்ணிக்கை 2,114 முதல் 2,662 பேர் வரை இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
48 உயர்மட்ட அரசு மற்றும் ராணுவத் தலைவர்கள் உள்பட 1,000 முதல் 1,500 வரை ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானின் துணை வெளியுறவு மந்திரி சயீத் கதிப்சாதே கூறும்போது, நாங்கள் அண்டை அரபு நாடுகளை குறிவைக்கவில்லை. அங்குள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துக்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்றார்.
