ஈரானின் ஏவுகணை திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல என்றும், அது நாட்டின் “சிவப்பு கோடு” (Red Line) எனவும் ஈரானிய உச்ச தலைவரின் ஆலோசகர் அலி ஷம்கானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதலை தவிர்க்க புதிய கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில், இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஏவுகணை திறன்
இஸ்லாமியப் புரட்சியின் 47வது ஆண்டு நினைவு தின பேரணியில் கலந்து கொண்டபோது அலி ஷம்கானி, “இஸ்லாமியக் குடியரசின் ஏவுகணை திறன் விவாதிக்கப்பட முடியாது” என்று அரச ஊடகங்களில் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரானின் அணு திட்டத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையை அதன் ஏவுகணை திட்டத்தையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்த விரும்புகிறது.
எனினும், ஈரான் தன்னுடைய அணு திட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதை பற்றி மட்டுமே, தடை நீக்கத்தின் அடிப்படையில் பேசத் தயாராக இருப்பதாகவும், ஏவுகணை உள்ளிட்ட பிற விவகாரங்களை இணைக்க முடியாது என்றும் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பு
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வொஷிங்டனில் சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Image Credit: PBS
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான எந்த ஒப்பந்தத்திலும் ஏவுகணை வரம்புகள் சேர்க்கப்பட வேண்டும் நெதன்யாகு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஏவுகணை திட்டம் பேச்சுவார்த்தை அட்டவணையில் எப்போதும் இடம்பெறவில்லை” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

