ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
யேமனின் ஹவுத்தி அமைப்பு சவுதி அரேபியாவின் ‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடம் மீதான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த தற்காலிகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடம்
ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலின் போது ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், சவுதி அரேபியா தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இந்தக் 1,200 கிலோமீட்டர் தூரம் கொண்ட ‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடம் முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை(செப்.10) ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்த ஈராக் அரசு, இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் ஈரான் எல்லைப் பகுதி மைசான் மாகாண இராணுவத் தளபதியை பணியில் இருந்து நீக்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

