• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்; ஆனால் காஸா விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம்…" – காங்கிரஸ்

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
“இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்; ஆனால் காஸா விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம்…" – காங்கிரஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதையடுத்து, அமெரிக்காவும் – இஸ்ரேலும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேல்தான் ஈரான் மீது தாக்குதலை நடத்தி போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்ரேல் ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதல்களை நிறுத்தினால், அதன் பிறகு இஸ்ரேல் மீதான எங்கள் பதிலடியைத் தொடரமாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார். அதனால் இந்தப் போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். ஆனால் இஸ்ரேலின் படுகொலைகள் தடையின்றி தொடரும் காஸாவில் இன்னும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. கடந்த பதினெட்டு மாதங்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூரமான துயரம் குறித்து பிரதமர் மோடியின் ஆழ்ந்த மௌனம், இந்தியாவின் தார்மீக மற்றும் அரசியல் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI – ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

Read More

Previous Post

அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

Next Post

போர் நிறுத்த உடன்பாட்டை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
போர் நிறுத்த உடன்பாட்டை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு | Makkal Osai

போர் நிறுத்த உடன்பாட்டை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin