Last Updated:
கமேனி கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கராச்சி அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.
ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.
ஈரானில் அணுகுண்டுகள் தயாரிக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றஞ்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி, கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கமேனி கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
அந்தவகையில், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.
அதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்தத் தாக்குதலில் போராட்டக்காரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதேபோன்று, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதரக தலைமையகம் தெரிவித்துள்ளது.

