ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கிய ஆயுதக்குழுவான ஹரக்கத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபா (Harakat Hezbollah al-Nujaba), இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி, இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 112 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உடன்படிக்கை மீறல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே செவ்வாய்க்கிழமை இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது, கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயல் என ஈராக் ஆயுதக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

Image Credit: Al Jazeera
இந்த ஆயுதக்குழுவின் தலைவர் அக்ரம் அல்-காபி, “இஸ்ரேல் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும் லெபனான் மக்கள் மீது தாக்குதல் நடத்தி உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன்படி, இதற்குப் பதிலடியாக, அவர்களை மீண்டும் அடக்குவதற்கு ‘எதிர்ப்பு முன்னணி’ (Resistance Front) வலிமையுடன் களம் இறங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் நேரடி வழிகாட்டுதல்
அமெரிக்கா-ஈரான் இடையே 14 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல்-லெபனான் எல்லையில் மோதல் குறையவில்லை.

‘இஸ்லாமிய எதிர்ப்பு முன்னணி’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த ஈராக் குழுக்கள், ஈரானின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுபவை என தெரியவருகிறது.
இக்குழுக்கள் எப்போது, எத்தகைய தாக்குதலை நடத்தும் என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதி முயற்சியைச் சிதைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
