இஸ்ரேலிடமிருந்து வெளிவரும் இடப்பெயர்வு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள தெற்கு லெபனானின் அல்மா அல்-ஷாப் பகுதியின் மேயர் தாக்குதல்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் படையெடுப்பின் காரணமாக, பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வசிக்கும் அந்த பகுதியை சேர்ந்த குடும்பங்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அவர்கள் பெரும்பாலும் பெய்ரூட்டில் மற்றவர்களின் தாராள மனப்பான்மையால் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
உணர்ச்சி ரீதியான சோர்வு
அத்தோடு, உணர்ச்சி ரீதியான சோர்வு, நிதி நெருக்கடி மற்றும் தொடர்ச்சியான நிலையற்ற தன்மை ஆகியன நிலவுகின்றன, என்று அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சுட்டிக்காட்டிய அவர்,
“நடந்து கொண்டிருப்பது ஒரு முழு சமூகத்தின், ஒரு வாழ்க்கை முறையின் மற்றும் நமது மண்ணுடனான ஆழமான பிணைப்பின் அழிவுதான்.
இவையெல்லாம் இருந்தபோதிலும், மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நிலைத்து நிற்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், ஓரளவு கண்ணியத்தைக் காக்கவும் முயற்சிக்கின்றனர்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
