தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது எனக் கனடியப் பிரதமர் மார்க் கார்னி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கியூபெக்கில் (Quebec) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
லெபனான் அரசாங்கம் ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பைத் தடை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத அமைப்பு
மேலும் தெரிவித்த அவர் “அந்தப் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு அவர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக லெபனான் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், இவையே இந்த ஆக்கிரமிப்பிற்குப் போதுமான அல்லது நியாயமான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இந்த அதிரடி இராணுவ நகர்வு, லெபனான் நாட்டின் பிராந்திய இறையாண்மையை நேரடியாக மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சுதந்திர நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச விதிகளுக்கு முரணான இந்தச் செயலைத் தனது நாடு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

