கிட்டத்தட்ட 2,500 கிலோமீட்டர்கள் இடைவிடாமல் அவரைத் துரத்திப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தில்லியின் நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் கடந்த மே 27 அன்று நரேஷ் லகாவத் என்பவர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் வேலை தேடிக் கொண்டிருந்த போது தில்லியைச் சேர்ந்த அலி இண்டர்நேஷனல் சர்வீஸ் எனும் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் குறித்து தெரிந்துகொண்டேன்.
அந்த நிறுவனம் எனக்கு தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளில் வேலை வழங்கியது. பின்னர், என்னை தாய்லந்துக்கு அனுப்பினர். ஆனால், நான் தாய்லாந்து சென்றவுடன் எனது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டனர். அங்கு இந்தியர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் சீன நிறுவனம் ஒன்றில் என்னைப் பணிபுரியுமாறு வற்புறுத்தினர்” என்று குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

