Last Updated:
போட்டி முடிந்த பின்னர் சஞ்சு சாம்சன் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருந்தார்
சென்னை அணியின் இளம் ரசிகரான சிறுவன் ஒருவருக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கொடுத்த பரிசு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி பெறும் 10-ஆவது தோல்வியாகும். போட்டி முடிந்த பின்னர் சஞ்சு சாம்சன் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது போட்டியை பார்க்க வந்திருந்த சென்னை அணியின் இளம் ரசிகர் ஒருவர் மைதானத்தை விட்டு வெளியேறாமல் சி.எஸ்.கே ஜெர்சி அணிந்தவாறு சஞ்சீவ் சாம்சனை பார்த்து அவரை பெயரை சொல்லி அழைத்தார்.
அதனை கண்டு கொண்ட சஞ்சு சாம்சன் “ஒரு நிமிடத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டு அந்த சிறுவனை நோக்கி சென்றார். பின்னர் அந்த சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.
அதன் பின்னர் தான் அணிந்திருந்த தொப்பியை அந்த சிறுவனுக்கு அவர் பரிசாக வழங்கினார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத அந்த சிறுவன் ஆச்சரியத்துடன் ரியாக்ஷன் செய்தார். இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


