
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா அண்மையில் பாடசாலை விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பாடசாலை பதில் அதிபர் கே.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்கள் தங்களது ஆக்கபூர்வமான புத்தாக்க கண்டுபிடிப்புக்களை இதில் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே. கமலமோகனதாசன், டொக்டர். சி. குணாளினி- (பிரதேச வைத்தியசாலை பனங்காடு), கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.மயூரன், திருமதி. ஆர். ஜயானந்தமூர்த்தி- ISA (விஞ்ஞானம்) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் திருமதி. ஏ. பவானந்தன் (விஞ்ஞான பாட இணைப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கான புள்ளிகள் இடப்பட்டு சிறந்த படைப்புகளுக்கு பதக்கங்களும், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

&w=1200&resize=1200,675&ssl=1)