இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ், நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை அகற்றுவதன் மூலம் நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறனை அதிகரிப்பதுடன், அவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தகுதியான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.


