இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.இலங்கை செல்லவுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்தனர். உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமாரை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நிமியக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்திய அணி வீரர்கள் தேர்வில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணிக்கு கே.எல் .ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி வரும் 22-ம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க – டி20 கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ் – பிசிசிஐ முக்கிய முடிவு
இலங்கை தொடரிலிருந்து இந்திய அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பொறுப்பேற்கவுள்ளார். ஜிம்பாப்வே அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி வீரர்கள் களம் காண உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
