இலங்கை தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா தொடரும் நிலையில் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை செல்லவுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்தனர். உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமாரை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்ந்து செயல்படுவார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
டி20 தொடருக்கான இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது. சிராஜ்.
டி20 போட்டிகளில் இம்மாதம் 27, 28, மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் 2, 4, மற்றும் 7 ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் பல்லிகெலேவிலும், ஒருநாள் போட்டிகள் கொழும்புவிலும் நடத்தப்படவுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)