இந்நிலையில், புதுவை முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா் ஆகியோா் உத்தரவின்பேரில், புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் காரைக்காலுக்கு வியாழக்கிழமை மாலை வந்தாா். அவா், குண்டு காயமடைந்த செந்தமிழன் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரை சந்தித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கிக் கூறினாா்.

