Last Updated:
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களில் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் 22 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது, எல்லை தாண்டியதாக கூறி சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், 4 விசைப்படகுகளுடன் 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


