இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI), சான்றொப்பம் மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான புதிய வெளிப்பணி சேவை வழங்குநராக (OSP) அல்ஹிந்த் குளோபல் சேவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
உயர் ஸ்தானிகராலயத்தின்படி, இந்த புதிய சேவை வழங்குநர், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம், மற்றும் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டையில் உள்ள துணைத் தூதரகங்கள் சார்பாக, ஜூலை 7, 2026 முதல் தனது செயல்பாடுகளைத் தொடங்கும்.
மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையம்
இந்த புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, தூதரக சேவைகளை எளிதாக அணுகுவதற்காக மட்டக்களப்பில் ஒரு இந்திய தூதரக விண்ணப்ப மையமும் (ICAC) திறக்கப்படும்.

ஜூலை 7 முதல், விண்ணப்பதாரர்கள் ICAC இலங்கை இணையதளம் மூலம் விசா, கடவுச்சீட்டு, OCI மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்ய முடியும்.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள புதிய மையங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

