இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றியமை ஒரு பெருமைமிகு அனுபவமாக இருந்ததாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து இன்று (16) புறப்படத் தயாராகும் நிலையில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்ட பதிவில் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா – இலங்கை உறவுகளை முன்னேற்றுவதற்கு தன்னைப் பின்தொடர்ந்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவிப்பு
இலங்கையுடன் அமெரிக்காவின் உறவு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங் பணியாற்றிய காலப்பகுதியில், பொருளாதாரம், மனிதாபிமான உதவிகள், ஜனநாயக மதிப்பீடுகள், மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்கா–இலங்கை உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

