Last Updated:
Cough syrup | கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், ஸ்ரீசன் உரிமையாளர் ரங்கநாதன் 10 நாள் போலீஸ் காவலில் மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவு.
இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், சென்னையில் கைதான ஸ்ரீசன் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனுக்கு மத்திய பிரதேச நீதிமன்றம் 10 நாள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
October 11, 2025 12:40 PM IST


