பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இருதரப்பு வர்த்தக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என்று பிரித்தானிய – இந்திய வர்த்தக சங்த்தின் (UK India Business Council) பணிப்பாளர் ரிச்சர்ட் ஹீல்ட் (Richard Heald) தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பிரித்தானியாவும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தை அடுத்தாண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் கெயர் ஸ்டமர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஏ.என்.ஐ. க்கு புதுடில்லியில் வழங்கிய பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது, இந்த உடன்படிக்கையானது இந்தியாவில் நேரடியாகவும் கூட்டு முயற்சிகள் மூலமும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும். அத்தோடு பிரித்தானியர்கள் இந்தியாவில் வர்த்தக முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வது போன்று இந்தியர்கள் பிரித்தானியாவில் வர்த்தக முதலீடு செய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும். இதன் ஊடாக இரு நாடுகளது பொருளாதாரமும் மேம்பாடு அடையப்பெறும்.
உலகின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துப் பார்த்தால் அது இந்தியாவை விடவும் மிகவும் குறைவாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post இருதரப்பு வர்த்தக மேம்பாட்டுக்கு இந்திய-பிரித்தானிய ஒப்பந்தம் உதவும் appeared first on Thinakaran.


