ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு இடையே தொடங்கிய போரில் இரான், பாலஸ்தீனத்துக்கு உதவி வந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் இருந்த இரான் தூதரகம்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர். இதனால் கடும் கோபமடைந்த இரான், கடந்த 13-ம் தேதி இஸ்ரேல்மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது.

மேலும், ஐ.நா-வில், “இரான் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொரு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க இரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்கா தலையிட வேண்டாம்” என இரான் தெரிவித்தது.

