இந்த நிலையில், இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல், இரான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் இரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது இரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அங்குள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், தங்களின் இயக்கங்களை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

