அயோக்கிய தற்குறிகள் இருவர்
அம்பேத்கரை திராவிட இயக்கங்கள் ஏன் மேடை ஏற்றவில்லை என்று அந்த அயோக்கிய தற்குறிகள் கேட்கிறார்கள். வார்த்தையை அடியாக கவனியுங்கள். நான் எவன் பெயரையும் குறிப்பிடவில்லை. அவன் பெயரையெல்லாம் சொல்லி, எங்கள் மேடையை கொச்சைப்படுத்தவும் நான் விரும்பவில்லை. அந்த தற்குறிகளுக்குச் சொல்கிறேன், அம்பேத்கர் என்பவர் யார்? அவரை எந்த இடத்தில் அடையாளம் காட்டியது என்றால், வேறு எந்த மாநிலமும் அம்பேத்கரை தொட பயந்த போது, இந்தியா முழுவதுக்கும் முதல் முன்னுதாரணமாக, அம்பேத்கர் என்கிற பெயரை தமிழ்நாட்டில் வைத்தது திமுக, கருப்பு சிவப்பு, உதயசூரியன், டாக்டர் கலைஞர். யாருக்கிட்ட போய் அம்பேத்கர் பேரு? மேடை ஏத்தவில்லையாம்!

