Last Updated:
ஒரு முன்னாள் தேசிய அணியின் கேப்டனான இம்ரான் கான் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்பட 14 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் குரல் கொடுத்துள்ளனர்.
73 வயதாகும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் , தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அவருக்குக் கண்ணில் ‘சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன்’ எனப்படும் ரத்த உறைவு பாதிப்பு இருந்தும், அதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கடினமான சூழலில், எல்லைகளைக் கடந்த மனிதாபிமான அடிப்படையில், இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல், ஸ்டீவ் வாக், இங்கிலாந்தின் நாசர் ஹுசேன் உள்ளிட்ட 14 உலகப்புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் ஒன்றிணைந்து பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “விளையாட்டு மைதானத்தில் நிலவும் போட்டிகள் ஆட்டம் முடிந்ததும் முடிந்துவிடும், ஆனால் மரியாதை என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், இம்ரான் கானுக்கு அவர் விரும்பும் தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு முன்னாள் தேசிய அணியின் கேப்டனான இம்ரான் கான் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
‘இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்’ – குரல் கொடுத்த 14 சர்வதேச முன்னாள் கேப்டன்கள்!


