தற்போதுள்ள வடக்கு-தெற்குப் பாதை, வட்டப் பாதை மற்றும் டவுன் பாதையிலும் புதிய நிலையங்கள் திறக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் அவர் 2030 ஆண்டிற்குள் 10 இல் 8 வீடுகள் ஒரு ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில் அமைந்திருக்கும் வகையில் இருக்கும் என்று கூறினார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வேயில் தஞ்சோங் சாலை, கதோங் பார்க், தஞ்சோங் கட்டோங், மரைன் பரேட், மரைன் டெரஸ், சிக்லாப், பேஷோர் ஆகிய 7 நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதில், ஜூன் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை(இன்று) முதல் ரயில் சேவை துவங்க உள்ளது. தாம்சன்-கிழக்கு கடற்கரை இரயில்வேயில் உள்ள 32 நிலையங்களில் 27 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்குள் பிடோக் சவுத் மற்றும் சுங்கை பிடோக் ஆகிய 2 நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

