Last Updated:
இந்த தடுப்பூசி திட்டத்தின் பலன்கள் 15-20 ஆண்டுகளில் தெரியவரும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 14 வயதான சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
பெண்கள் மத்தியில் அதிகஅளவில் பரவும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் புதிதாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இந்த புற்றுநோய் ஏற்படுவதுடன், சுமார் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், 14 வயதுள்ள சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஆயுஷ்மான் மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி திட்டத்தின் பலன்கள் 15-20 ஆண்டுகளில் தெரியவரும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி என்றும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
இன்று முதல் சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. இலவசமாக செலுத்தும் திட்டம் தொடக்கம்!


