Last Updated:
இந்தச் சூரியப் புயலால் பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் செயற்கைக்கோள் சேவைகளில் சிறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்படுகிறது.
கடந்த ஜூன் 6-ஆம் தேதி சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்புக் காரணமாக, சக்திவாய்ந்த ‘சூரியப் புயல்’ உருவானது. இந்த புயல் இன்று மற்றும் நாளைய தேதிகளில் (ஜூன் 8, 9) பூமியைக் கடக்கலாம் என விண்வெளி வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதனால் செயற்கைக்கோள் சேவைகளில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்றாலும், பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘NOAA’ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு இந்தச் சூரியப் புயல் குறித்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, ஜூன் 8-ஆம் தேதி ‘ஜி3’ அளவிலான சக்திவாய்ந்த புயலும், அதன் தீவிரம் சற்றுக் குறைந்து ஜூன் 9-ஆம் தேதி ‘ஜி2’ (G2) அளவிலான மிதமான புயலும் பூமியைத் தாக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து வினாடிக்கு சுமார் 1500 கி.மீ என்ற வேகத்தில் இந்தப் புயல் வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூரியப் புயலால் ஏற்படும் பாதிப்புகள் இந்திய இந்திய வானியற்பியல் நிலையத்தின் விஞ்ஞானியும் பேராசிரியுமான எஸ்.பி. ராஜகுரு கூறுகையில், “இந்தியா போன்ற நடுத்தர மற்றும் கீழ் அட்சரேகைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதனால் எவ்விதத் தாக்கமும் இருக்காது. துருவப் பகுதிகளில் மட்டுமே அதிகமாக இருக்கும். அங்கு ‘அரோரா’ (Auroras) எனப்படும் அபூர்வ ஒளித் தோற்றத்தை பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், சூரியக் கதிர்வீச்சால் துருவப் பகுதிகளில் உள்ள செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவற்றின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, அவற்றின் சுற்றுப்பாதையை உயர்த்துவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்றும் தெரிவித்தார்.
கொல்கத்தா IISER நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் திப்யேந்து நந்தி இது குறித்து நம்மிடம் பேசுகையில்,”இந்தச் சூரியப் புயலால் பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் செயற்கைக்கோள் சேவைகளில் சிறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜிபிஎஸ் வழிகாட்டி சேவைகளில் சிறிய அளவிலான பிழைகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார். பொதுமக்களின் இயல்பு இயல்பு வாழ்க்கைக்கு எந்தவிதப் பாதிப்பும் வராது என்றும் தெரிவித்தார்.
இன்றும், நாளையும் பூமியைத் தாக்கும் அதிபயங்கர சூரியப் புயல்..மின்சாரம், செல்போன், இன்டர்நெட் முடங்குமா..?

