கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டி உள்ளது என்று அந்த அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார். அப்பொழுதுதான் அதிகமான ஐபிஎல் கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணியாக மாற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லீக் சுற்றில் 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் முடிவு ஏற்படாத அடிப்படையில் 20 புள்ளிகளை பெற்றது. அதைத்தொடர்ந்து குவாலிபயர் 1 சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெறும் 113 ரன்களுக்கு சுருட்டி 11-ஆவது ஓவரிலேயே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஆட்டநாயகனாக கொல்கத்தாவின் மிட்செல் ஸ்டார்க்கும், தொடர் நாயகனாக அதே அணியின் சுனில் நரேனும் அறிவிக்கப்பட்டனர். கொல்கத்தா அணியின் இந்த அதிரடியான வெற்றிக்கு அதன் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீர் முக்கிய காரணமாக இருந்தார்.
இதையும் படிங்க – இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் சம்பளம் இத்தனை கோடியா? – விவரம் இதோ
இவரே இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கவுதம் காம்பீர் கூறியதாவது-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டும் அப்போதுதான் ஐபிஎல் தொடரில் அதிகமான முறை சாம்பியன் பட்டம் வென்ற வெற்றிகரமான அணி என்ற பெயரை பெற முடியும். அதற்கான பயணம் இந்த ஐபிஎல்-ல் தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் அணியின் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் அற்புதமாக அமைந்தது. என்று கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
