Last Updated:
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பலருக்கு முறையான விபத்து இழப்பீடு கிடைக்காத நிலையும் தொடர்கிறது. நாட்டில் ஓடும் வாகனங்களில் சரிபாதிக்கும் மேலான வாகனங்களுக்கு முறையாக காப்பீடு இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சாலை விபத்து வழக்கு ஒன்றை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இந்த காப்பீடு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
அந்த வகையில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டத்தை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து இத்திட்டத்தை வடிவமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் உள்ள அதிநவீன கேமராக்கள் மூலமாக வாகன எண்களை கண்டறிந்து, காப்பீடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு அபராத அறிவிப்புகளை அனுப்பவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதுமட்டுமன்றி காப்பீடு இல்லாத வாகனங்களுக்கான அபராதத்தை மேலும் கடுமையாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் நிலையங்களிலேயே தானியங்கி கேமராக்கள் உள்ளிட்டவை மூலமாக காப்பீட்டை சரிபார்க்கும் நடைமுறையும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்சூரன்ஸ் இல்லையா? இனி வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை!


