Last Updated:
இனி அனைத்து CBS-எனேபிள் செய்யப்பட்ட தபால் நிலையங்களில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக்ஸ் e-KYC பயன்படுத்தி RD மற்றும் PPF அக்கவுண்ட்களை திறக்கலாம்.
இந்திய தபால் துறையானது ஆதார் அடிப்படையிலான e-KYC பயோமெட்ரிக் சரிபார்ப்பு சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக அதனை ரெக்கரிங் டெபாசிட் (RD) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) போன்ற திட்டங்களையும் சேர்த்துள்ளது. முன்னதாக இந்த டிஜிட்டல் வசதியானது மன்த்லி இன்கம் ஸ்கீம் (MIS), டைம் டெபாசிட் (TD), கிசான் விகாஸ் பத்ரா (KVP) மற்றும் நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் (NSC) போன்ற குறிப்பிட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஏப்ரல் 23, 2026 முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு இந்த ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு முறையானது அமல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்காக ஜனவரி 6, 2025இல் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை பயன்படுத்தி தபால் நிலைய சேமிப்பு கணக்குகளை திறப்பதற்கான வசதியை அமல்படுத்தியது.
ஜூலை 7, 2025 அன்று வெளியான ஆணையின் படி, இனி அனைத்து CBS-எனேபிள் செய்யப்பட்ட தபால் நிலையங்களில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக்ஸ் e-KYC பயன்படுத்தி RD மற்றும் PPF அக்கவுண்ட்களை திறக்கலாம்.
- RD மற்றும் PPF அக்கவுண்ட்டுகளை திறப்பது
- RD மற்றும் PPF அக்கவுண்ட்களில் டெபாசிட் செய்வது
- RD மற்றும் PPF அக்கவுண்ட்டை காண்பித்து கடன்கள் வாங்குவது
- RD மற்றும் PPF கடன்களை திருப்பி அடைப்பது
- PPF அக்கவுண்ட்களில் இருந்து பணத்தை வித்ட்ரா செய்வது (வித்ட்ரா செய்வதற்கான தொகைக்கு எந்த ஒரு உச்சவரம்பும் அமைக்கப்படவில்லை)
வரக்கூடிய நாட்களில் அக்கவுண்ட்டை மூடுவது, நாமினி சம்பந்தப்பட்ட அப்டேட்டுகள், அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்வது போன்றவற்றிற்கும் இந்த பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC சேவையை கூடிய விரைவில் தபால் நிலையம் அறிமுகப்படுத்த உள்ளது.
வாடிக்கையாளரின் தகவலை பாதுகாப்பதற்கு பயோமெட்ரிக் பரிவர்த்தனைகளின்போது பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களிலும் ஆதார் நம்பர்கள் மறைக்கப்பட்டிருக்கும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஆதார் நம்பர் மறைக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், தபால் நிலையத்தில் உள்ள ஊழியர் தன்னுடைய கைகளால் முதல் 8 இலக்கங்களை கருப்பு மை அல்லது ஸ்கெட்ச் பேனா பயன்படுத்தி மறைக்க வேண்டும்.
ஆதார் அடிப்படையிலான RD மற்றும் PPF அக்கவுண்ட் எப்படி இயங்குகிறது?
- முதலில் தபால் நிலையத்தில் உள்ள உதவியாளர் ஆதாரை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை பெறுவதற்கு டெபாசிட் செய்பவரின் பயோமெட்ரிக் விவரங்களை எடுத்துக் கொள்வார்.
- அனைத்து விவரங்களையும் நிரப்பிய பிறகு சரிபார்ப்பு மற்றும் டிரான்ஸாக்ஷனை நிறைவு செய்வதற்கு இரண்டாவது பயோமெட்ரிக் ஸ்கேன் எடுக்கப்படும்.
- லோன் அக்கவுண்ட்டுகள் அல்லது RD, PPF அக்கவுண்ட்களில் கிரெடிட் அல்லது டெபிட் செய்வதற்கு எந்தவிதமான படிவங்கள் அல்லது பே-இன் ஸ்லிப்புகள் சேகரிக்கப்படாது.
- அக்கவுண்ட்டை திறப்பதற்கான படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது RD அல்லது PPF அக்கவுண்ட்களில் உள்ள ஆரம்ப டெப்பாசிட்டாக கருதப்படும்.
- ஒருவேளை தபால் நிலைய சேமிப்பு கணக்கில் இருந்து பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த டெபிட் அக்கவுண்ட் என்பது சிங்கிள் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்வதற்கு SB-7 படிவம் தேவை இல்லை.
July 17, 2025 1:54 PM IST


