வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மட்டும் அரைசதம் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த பந்துகளில் 30 ரன்களும் 35 ரன்களும் எடுக்க, அந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. களம் இறங்கும் ஒவ்வொரு வீரரும் சரியாக ஸ்டிரைக் அடித்து விளையாடினால் அதிக ரன்களை எடுக்க முடியும் என்ற ஃபார்முலாவை இந்திய அணி தற்போது பின்பற்றி வருகிறது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ஒரு முக்கியமான வீரர் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறும்போது, “திறமை மற்றும் உறுதிப்பாடு போன்ற காரணங்களால் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் மிக முக்கியமான வீரராக மாறியுள்ளார். பேட்ஸ்மேனாக, பந்து வீச்சாளராக, பீல்டராக இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை 10 பந்துகளில் 25 ரன்கள் அல்லது இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் ஆட்டத்தின் நிலையே மாறிவிடும். சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக விளையாடும்போது கண்டிப்பாக அழுத்தம் இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாடும் போது கண்டிப்பாக அழுத்தம் கூடுகிறது.

