எரிபொருளுக்கான அரசு மானியம் இந்த மாதமும் வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எவ்விதத் தயக்கமும் இன்றி உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தைக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை உயர்த்தவில்லை
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

“உலக சந்தை விலைகளின் உயர்வுக்கு ஏற்ப நாங்கள் எரிபொருள் விலைகளை உயர்த்தவில்லை. அதன் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், எரிபொருள் மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.
இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் அதன் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டன.
உலக சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன
தற்போது, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஓரளவிற்குக் குறைந்துள்ளன.
உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஓரளவிற்குக் குறைந்த பிறகு, அந்த நிவாரணத்தை வழங்குவதற்காக இம்முறை எண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டன” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

