புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு தானியங்களால் ஆன விதவிதமான இனிப்புகள் மற்றும் கார வகைகள் விறுவிறுப்பாக தயாரிக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது.
புதுக்கோட்டையில் இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் நம்முடைய பாரம்பரிய உணவுப்பழக்கத்தை இன்றைய நவீன உலகில் உள்ள குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், சிறுதானிய வகைகளான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் இருந்து முறுக்கு, மிக்சர், அதிரசம், காராசேவ், சீடை, லட்டு போன்ற பல்வேறு வகையான சிறுதானிய தின்பண்டங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1364 விவசாயிகளை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அதாவது விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய நெல், சிறுதானியகளை பெற்று அதனை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, தினை அதிரசம், கருப்பு கவுனி அதிரசம், தினை மிக்சர், வரகு மிக்சர், ராகி மிக்சர், வரகு முறுக்கு, தினை முறுக்கு, கவுனி முறுக்கு, ராகி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா முறுக்கு, தூயமல்லி முறுக்கு, தினை மனோவளம், கம்பு லட்டு, தினை லட்டு, ராகி லட்டு, மாப்பிள்ளைச்சம்பா லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப்பயறு லட்டு, தினை காராச்சேவ், வரகு காராச்சேவ் என சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த தின்பண்டங்கள் என பல்வேறு வகைகளில் பலகாரங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் செயற்கை சாயம், செயற்கை மணமூட்டி வெள்ளைச்சர்க்கரை, மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எவ்விதமான செயற்கை பொருட்களும் சேர்க்காமல் சுத்தமான நாட்டுக் கடலை பருப்பில் ஆட்டி எடுக்கப்பட்ட கடலை எண்ணெய், நாட்டுச்சர்க்கரை, பனை கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும். இந்த திண்பண்டங்கள், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழர்கள் வாழக்கூடிய வெளிநாட்டுகளிலும் விற்பனை செய்யப்படுகிறதாக கூறுகின்றனர்.
இந்த சிறுதானிய திண்பண்டங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அத்துடன் விரும்பி உண்ண வைக்கும் சுவையுடன் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என்பதால் பல்வேறு பலகார வகைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றனர். இந்த நிறுவனத்தில் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைத்துள்ளதாக இங்கு வேலை செய்து வரும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)