Last Updated:
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பிக்கள் சிலர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு உள்ளிட்ட காரணங்களால் இரு மசோதாக்களும் நிறைவேறும் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாக்கள் நிறைவேறும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முந்தைய கூட்டத் தொடரில், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து தோற்கடித்ததாக கூறினார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை இருப்பதால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, 2029 மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
30 முதல் 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கம் என்றும், தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பிக்கள் சிலர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு உள்ளிட்ட காரணங்களால் இரு மசோதாக்களும் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறும்” – மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை


