• Login
Tuesday, August 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு | It is sad to support this regime Chirag Paswan attacks Nitish Kumar

GenevaTimes by GenevaTimes
July 26, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
“இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு | It is sad to support this regime Chirag Paswan attacks Nitish Kumar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹார் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓர் அரசை ஆதரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “குற்றங்கள் அதிகரித்து வரும் ஓர் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக உள்ளது. பிஹாரில் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு நிர்வாகம் குற்றவாளிகளுக்கு முன் முற்றிலும் அடிபணிந்துள்ளது. பிஹாரில் உள்ள மக்கள் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை என்றும், குற்றச் செயல்கள் ஏன் குறையவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசு நிர்வாகம் குற்றங்களை தடுக்கத் தவறிவிட்டது போல் தெரிகிறது. அரசாங்கம் நிலைமையை மறைக்க முயற்சிக்கிறது அல்லது அதைக் கையாள முடியாத நிலையில் இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கம் சரியான நேரத்தில் விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது” என்றார் மேலும், “தேசிய அரசியலில் நீண்ட காலம் இருக்க நான் விரும்பவில்லை. எனது அரசியல் எப்போதும் பிஹார் மக்களுக்காகவே இருக்கும். ‘பிஹார் முதலில், பிஹாரி முதலில்’ என்பதுதான் எனது லட்சியம். பிஹார் மாநிலத்தை வளர்ந்த மாநிலங்களுக்கு இணையாகப் பார்க்க விரும்புகிறேன்.

பிஹார் அரசியலுக்கு விரைவில் திரும்புவதற்கான எனது விருப்பத்தை கட்சிக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி 100% வெற்றியைப் பெற்றது. வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் அவ்வாறே வெற்றி பெறுவோம்” என்றார் சிராக் பாஸ்வான்.

சிராக் இப்போது…. – ​முன்​னாள் மத்​திய அமைச்​சரும் பிஹாரின்​ மறைந்த தலை​வரு​மான ராம் விலாஸ் பஸ்​வான் தொடங்​கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்​ஜேபி). இவர், மத்​தி​யில் எந்த கட்சி தலை​மை​யில் ஆட்சி வந்​தா​லும் கூட்​டணி வைத்து அமைச்​ச​ராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்​வான் இப்போது பாஜக தலை​மையி​லானக் கூட்​ட​ணி​யில் மத்​திய அமைச்​ச​ராக பதவி வகிக்கிறார்.

ஆரா​வில் சமீபத்தில் எல்​ஜேபி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது எல்​ஜேபி தலை​வர் சிராக் பஸ்​வான் பேசுகை​யில், “நான் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டியிடு​வேன். 243 தொகு​தி​களி​லும் எல்​ஜேபி வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வார்​கள். பிஹார் மக்​களுக்​கான தேர்​தலில் தனித்​தொகுதி அல்​லாத பொது தொகு​தி​யில் போட்​டி​யிடு​வேன். பிஹாரை முதல் மாநில​மாக மாற்​றவே இந்த முடிவை எடுக்​கிறேன்” என்​று பேசியிருந்தார்.

பிஹாரில் 5 மக்​களவை எம்​.பி.க்​கள் கொண்ட எல்​ஜேபி​யில் ஹாஜிபூர் தொகுதி எம்​.பி.​யாக சிராக் உள்​ளார். தேர்​தலுக்​காக இவர் மத்​திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்​சர் பதவி​யில் இருந்து வில​கு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் (என்​டிஏ) சிக்​கலை உரு​வாக்​கும் வாய்ப்​பு​கள் உள்​ளன. ஏனெனில், அவரது கட்​சி​யின் 5 எம்​.பி.க்​கள் ஆதரவு என்​டிஏ.வுக்கு மத்​தி​யில் மட்​டும் தொடர உள்​ளது.

பிஹாரில் சுமார் 5.3 சதவி​கிதம் உள்ள தலித் பிரிவு​களில் ஒன்​றாக பாஸ்​வான் சமூகம் உள்​ளது. இவர்​களின் ஆதரவு பெற்ற ஒரே கட்​சி​யாக எல்​ஜேபி உள்​ளது. இக்​கட்​சி​யுடன் சிறிதளவு முஸ்​லிம் வாக்​கு​களும் உள்​ளன. எனவே, எல்​ஜேபி தனித்து போட்​டி​யிட்​டால், என்​டிஏவுக்கு பலன் கிடைக்​கும் என எதிர்​பார்க்கப்படுகிறது.

அதே​நேரத்​தில், எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​டணி வாக்​கு​களு​டன் நிதிஷ் கட்​சி​யின் வாக்​கு​களை​யும் சிராக்​கின் எல்​ஜேபி பிரிக்​கும் சூழல் உள்​ளது. பிஹாரில் 2-வது பெரிய சமூக​மாக 14.3 சதவீதத்​தில் உள்ள யாதவர்​கள் பெரும்​பாலும் லாலு​வின் ராஷ்டிரிய ஜனதா தளத்​துடன் உள்​ளனர். லாலு​வுடன் காங்​கிரஸும் கூட்​ட​ணி​யில் இடம்​பெறு​வ​தால் முஸ்​லிம் வாக்​கு​களும் மெகா கூட்டணிக்கு கிடைத்​து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஆய்வை நடத்தி வருகிறது. இதன்படி, உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை பெற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

கனடாவில் அறிமுகமாகும் தீபச்செல்வனின் சயனைட் நாவல்

Next Post

திருமணம் செய்த ஒரே நாளில் உயிரிழந்த முதிய கணவர்.. ஒரேநாளில் கோடீஸ்வரி ஆன பணிப்பெண் மனைவி | Makkal Osai

Next Post
திருமணம் செய்த ஒரே நாளில் உயிரிழந்த முதிய கணவர்.. ஒரேநாளில் கோடீஸ்வரி ஆன பணிப்பெண் மனைவி | Makkal Osai

திருமணம் செய்த ஒரே நாளில் உயிரிழந்த முதிய கணவர்.. ஒரேநாளில் கோடீஸ்வரி ஆன பணிப்பெண் மனைவி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin