இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மக்கள் பீதி அடைந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் நடுங்கியுள்ளன. மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பாண்டுங் மற்றும் ஜகார்த்தாவின் சேட்டிலைட் நகரங்களான டெபோக், டாங்கெராங், போகோர் மற்றும் பெகாசி ஆகியவற்றில் மாடி வீடுகள் பலமாக குலுங்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: அழகுக்கு வயதில்லை.. 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று சாதனை படைத்த பெண்!
இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜாவா தீவின் பஞ்சார் நகருக்கு தெற்கே 102 கிலோமீட்டர் தொலைவில் 68.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
