Last Updated:
இஸ்ரோ வடிவமைத்த CMS-03 செயற்கைக்கோள் சிறப்புகள் என்ன தெரியுமா?
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த 1,600 கோடி ரூபாயில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் பல சிறப்பம்சங்களைக் கொண்டது. அதுமட்டுமின்றி இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையை வலுவடைய செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ள LVM3-M5 ராக்கெட் 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைக்கோளை கொண்டுச் சென்றுள்ளது.
ராணுவ பயன்பாடு, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ தயாரித்துள்ள செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03. இந்தியாவிலிருந்து இதுவரை புவிவட்ட பாதைக்கு ஏவப்பட்டதிலேயே அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03.
1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 4,410 கிலோ என இஸ்ரோ தகவல். இந்தச் செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ., அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் உட்பட பல்வேறு நவீன தொழில் நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. இந்தியக் கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள், விமானங்களின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் என தகவல்.
பரந்த கடற் பகுதிகளிலும் இந்திய நிலப்பரப்பிலும் தொலைத்தொடர்பு சேவைகளை தடையின்றி வழங்கும் ஆற்றல் கொண்டது. சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
November 02, 2025 7:25 PM IST
இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்க்கப்போகும் CMS-03 செயற்கைக்கோள்! இதில் இருக்கும் சிறப்புகள் என்ன தெரியுமா?


