Last Updated:
சர்வசேத அளவில் நிலவி வரும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 3,500 கோடி ரூபாய் வரை பங்குகளை விற்றதால் சந்தை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது.
இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்களின் ஒரே நாளில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.
நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளி அன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. வர்த்தக முடிவில் 961 புள்ளிகள் சரிந்து, 81,287 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 317 புள்ளிகள் சரிந்து, 25,178 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதேபோல, ஆட்டோமொபைல், நிதித்துறை, FMCG, உலோகம், மருந்து நிறுவனங்கள் என்று பல துறை நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
சர்வசேத அளவில் நிலவி வரும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 3,500 கோடி ரூபாய் வரை பங்குகளை விற்றதால் சந்தை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. இதனால் முதலீட்டார்களுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 ரூபாய் 97 பைசாவாக சரிந்தது.

