Last Updated:
பிசிசிஐ பொதுக்கூட்டம் செப்டம்பரில் நடக்க இருக்கும் நிலையில் அப்போதே தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவராக ராஜிவ் சுக்லா அடுத்த மாதம் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ரோஜர் பின்னிக்கு வரும் ஜூலை 19 ஆம் தேதியுடன் 70 வயதாகிறது.
பிசிசிஐ விதிகளின்படி ஒருவர் 70 வயதுக்கு மேல் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.இதனையடுத்து தற்போதைய துணைத் தலைவராக இருக்கும் ராஜிவ் சுக்லா, இடைக்கால தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
65 வயதாகும் ராஜிவ் சுக்லா, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது
பிசிசிஐ பொதுக்கூட்டம் செப்டம்பரில் நடக்க இருக்கும் நிலையில் அப்போதே தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ரோஜர் பின்னிக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு பிசிசிஐயின் இடைக்கால தலைவராக ராஜிவ் சுக்லா செயல்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த ராஜிவ் சுக்லா?
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராஜிவ் சுக்லா, ஐபிஎல் சேர்மனாகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2020 டிசம்பரில் அவர் பிசிசிஐ துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் ராஜிவ் சுக்லா சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
June 02, 2025 4:53 PM IST


