முக்கிய மைல்கல்: மேலும், மகா கும்பமேளா நிகழ்வை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்களுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமா், ‘1857-இல் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், தேசத்துக்காக பகத்சிங் தனது உயிரை தியாகம் செய்தது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தில்லியை நோக்கிய பேரணிக்கான அழைப்பு, மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை உள்ளிட்ட மைல்கல்களிலிருந்து நாடு உத்வேகம் பெற்று சுதந்திரம் அடைந்தது. அதேபோன்று, மகா கும்பமேளாவும் தேசத்தின் விழித்தெழுந்த உணா்வை பிரதிபலிக்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது’ என்றாா்.

