சிங்கப்பூரில் துணைக்காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இந்திய ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் என்ற 30 வயதுமிக்க அவர், இரண்டு செர்டிஸ் சிஸ்கோ துணைக்காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 10) குற்றம் சாட்டப்பட்டது.
கொட்டும் மழையில் புல்வெளியில் உணவு… வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை இது தானா?
தடைசெய்யப்பட்ட இடத்தில் குப்பையை போட்ட கிருஷ்ணன், தம் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதற்காக S$100 லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க முயன்ற இந்திய ஊழியர்
கடந்த ஏப்ரல் 18 அன்று, செர்டிஸ் சிஸ்கோ துணைக்காவல் அதிகாரிகளான ஸ்ரீ சுதன் செல்லா மற்றும் சுகீர்த்தா பி கலைவாணன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், அந்த இரண்டு செர்டிஸ் சிஸ்கோ அதிகாரிகளும் லஞ்சத்தை வாங்க மறுத்தனர்.
பின்னர் இந்த லஞ்ச வழக்கு, ஊழல் தடுப்பு புலனாய்வுப் அமைப்புக்கு (CPIB) பரிந்துரைக்கப்பட்டது.
தண்டனை என்ன?
கிருஷ்ணன், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் போன்றவை மிகக் கடுமையாக பார்க்கப்படும், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது இரக்கம் கட்டப்பட மாட்டாது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் கொடுத்த குற்றம் நிரூபணமானால் S$100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலியான சான்றிதழ்: “செக் வைத்த MOM” – 3 ஊழியர்களுக்கு சிறை

