Last Updated:
இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என எம்.பி. துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்கு வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கை மீனவர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி., துரைராசா ரவிகரன் பேசியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான கடல் தொழில் வரவு செலவுத் திட்ட அமைச்சக குழுவின் அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் செயல்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தத் தவறினால், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என ரவிகரன் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் மீனவர்களின் பிரதான மீன்பிடித் தளமாக இலங்கை எல்லை உள்ளதாகவும், இறால் உள்ளிட்ட அதிக விலை போகும் மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசை அழைத்து இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ரவிகரன் வலியுறுத்தினார்.
March 06, 2025 9:40 PM IST
“இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்” – இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு


